Tuesday, February 17, 2009

மக்களின் மீது மறைமுக வரி விதிப்பு ?



பொருளாதார தேக்கத்திலிருந்து இந்தியா மீள்வதற்காக வரிச் சலுகைகள், வரி விலக்குகள், வரி குறைப்புகள், வரி தள்ளுபடிகள், வரி விடுமுறைகள் என்றெல்லாம் வாரி வழங்கப் படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த பொது மக்கள், பொருளாதார நிபுணர்கள், தொழிற் துறையினர் ஆகியோருக்கு மத்திய அரசு அளித்த அதிர்ச்சி வைத்தியம் இந்த "மறைமுக வரி விதிப்பு". இது குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.


(Courtesy:econjournal.com)

ஒரு நாட்டின் அரசின் வரவு செலவில் ஏற்படும் "துண்டு" இறுதியாக அந்த நாட்டின் மக்களின் மீதுதான் மறைமுகமாக சாத்தப் படுகிறது. இந்த "துண்டிற்கு" வெவ்வேறு வடிவங்கள் உண்டு.

ஒரு அரசு தனது செலவிற்கு போதிய பணம் கிடைக்காமல் போகும் பட்சத்தில் கடைசியாக கை வைக்கும் இடம் மக்களின் (முக்கியமாக நடுத் தர, எளிய மக்களின்) "பாக்கெட்". காலபோக்கில் மக்களின் உபயோகப் பொருட்களின் மீது அதிகரிக்கப் படும் நேரடி மற்றும் மறைமுக வரிகள், போக்குவரத்து, குடிநீர் போன்ற அரசு நிறுவனங்களின் சேவை கட்டணங்கள் அதிகரிப்பு என்று அரசு தனது நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க மக்களிடமிருந்தே பணம் "வசூல்" செய்ய வேண்டியிருக்கிறது.

இதற்கு மாற்று வழியாக, தலைமை வங்கியிடமிருந்து அரசு அதிக கடன் பெற முயற்சி செய்யும் பட்சத்தில் புதிய "கரன்சி" நோட்டுகள் அடிக்க வேண்டியதாகிறது. இதனால், நாட்டில் விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்ற சிக்கல்கள் ஏற்பட்டு மீண்டும் அப்பாவி மக்களே பாதிக்கப் படுகின்றனர். ஒருவேளை நோட்டு அச்சடிக்கப் படா விட்டால், அரசு உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் அதிக கடன் வாங்க வேண்டியிருக்கும். அப்போதோ, நாட்டில் கடும் நிதி நெருக்கடி மற்றும் தட்டுப் பாடு நேரிடும்.

ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு நிதி நெருக்கடி ஏற்படும் போது, அந்நாடு சர்வதேச தரவரிசையில் கீழே இறங்குகிறது. ஏற்கனவே நம் நாட்டின் தரவரிசை மிகவும் கீழே. அதாவது BBB-. இது இடைகால பட்ஜெட்டிற்கு பின்னர் இன்னும் குறைக்கப் படலாம் என்று தெரிகிறது. இதனால் உலக சந்தையில் நம்நாட்டின் கரன்சியின் மதிப்பு மேலும் குறைந்து இறக்குமதி செலவுகள் அதிகமாகும். இதனால், உள்நாட்டில் விலைவாசி விரைவாக ஏறும் வாய்ப்பு உள்ளது.

மேலும், ஒரு அரசின் நிதிப் பற்றாக்குறையானது, அந்நாட்டில் புதிய மக்கள் நல திட்டங்கள், அடிப்படை கட்டுமான வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை ஆரம்பிக்க பெரும் தடையாக இருக்கும். இதனால், மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கும்.

எப்படிப் பார்த்தாலும், ஒரு நாட்டின் அரசிற்கு பட்ஜெட்டில் விழும் துண்டானது நாட்டின் மக்களையே அதிகம் பாதிப்பதனால்தான், பட்ஜெட் பற்றாக்குறையை "மறைமுக வரி விதிப்பு" என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

இப்போது இந்தியாவின் கதைக்கு வருவோம்.

மத்திய அரசின் நடப்பு நிதியாண்டின் (2008-09) நிதித் தட்டுப்பாடு (Fiscal Deficit) எவ்வளவு தெரியுமா? கொஞ்சம் மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்! சுமார் மூன்று லட்சத்து இருபதினாயிரம் கோடி ரூபாய். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் ஆறு சதவீதம். கடந்த நிதியாண்டில் இது வெறும் 2.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத் தக்கது. மேலே சொன்ன தொகையோடு, பெட்ரோல் மானியம் மற்றும் உர மானியத்திற்கான (சுமார்) 95,000 கோடி ரூபாயையும் கூட்டி கொண்டால் வரும் நிதிப் பற்றாக்குறை அளவு கிட்டத்தட்ட 4,15,000 கோடி ரூபாய். (குழந்தைகள் முதல் மரணப் படுக்கையில் இருப்பவர் வரை ஒவ்வொரு இந்தியனுக்கு சராசரியாக விழப் போகிற "துண்டு" சுமார் 4,100 ரூபாய். இது மத்திய அரசு வகையில் மட்டும்தான். இன்னும் மாநில அரசுகள், மாநகராட்சிகள், கிராம பஞ்சாயத்துக்கள் என பல அரசு அமைப்புகளாலும் மக்களுக்கு போடப் படும் "துண்டுகளின்" பாரம் தாங்காமல் மக்கள் மயங்கி விழ வேண்டியிருக்கும்.)

நாட்டினை பொருளாதார தேக்கத்திலிருந்து மீட்பதற்காகவே இவ்வாறு அரசு செலவினங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளன என்று சிலர் கூறிக் கொள்வது எந்த அளவிற்கு உண்மை என்று அரசின் நிதி நிலை அறிக்கையை சற்று கூர்ந்து படித்தாலே புரிந்து கொள்ள முடியும்.

ஒரு அரசின் செலவினங்களில் இரு வகை உண்டு. அதாவது, அரசின் நிர்வாக செலவுகள் (Non Plan Expenditure) மற்றும் மக்கள் நல மற்றும் இதர அடிப்படை கட்டுமானத்திற்கான திட்ட செலவினங்கள் (Plan Expenditure). நடப்பு நிதியாண்டிற்கான மதிப்பீட்டிலிருந்து அரசின் நிர்வாக செலவுகள் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி அதிகமாகி உள்ளது. திட்ட செலவுகள் சுமார் நாற்பதினாயிரம் கோடி அதிகமாகி உள்ளது. எனவே அரசின் அதிகப் படியான நிர்வாக செலவே இந்த நிதிப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என்று புரிந்து கொள்ள முடியும்.

இன்றைக்கு நாடிருக்கும் பொருளாதார நிலையில், பொது மக்களை விட அரசுக்கு அதிக பொறுப்புகள் உண்டு. மேலும், குறைந்த அளவிலேயே கைவசம் உள்ள பணத்தை மிச்சப் படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதைக்கு திருப்பி விடுவதில் மத்திய அரசு மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

இதில் இந்த அரசுக்கு மட்டுமல்ல அடுத்து அமையப் போகும் அரசுக்கும் நிறைய கடமைகள் இருக்கின்றன.

மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது...?


ஒவ்வொருவருடைய மின் அஞ்சல் முகவரியிலும் "@" என்ற சின்னம் வருவது யாவரும் அறிந்ததே. இந்தச் சின்னம் எப்படிப் புழக்கத்தில் வந்தது?

மின் அஞ்சல் முகவரியில் முதன் முதலாக இந்த @ சிம்னத்தை உபயோகித்தது "ரே டாம்லின்ஸன்" (Ray Tomlinson) என்னும் ஒரு கம்ப்யூட்டர் பொறியாளர். இவர் 1971ஆம் ஆண்டு முதலில் தனக்குத் தானே ஒரு மின் அஞ்சலை இந்தச் சின்னத்தை உபயோகித்து அனுப்பிக்கொண்டார்.

ஏன் இவர் இந்தச் சின்னத்தை தேர்ந்தெடுத்தார்? அவர் சொல்கிறார், " கீ போர்டில் அக்கரையுடன் பார்த்தேன் எவருடைய பெயரிலிலும் வராததும், குழப்பம் விளைவிக்காததுமாக சின்னம் இருக்கிறதா என்று, பின் இதைத் தேர்ந்தெடுத்தேன்." என்று சொன்னார்.


இந்த @ சின்னம் கம்ப்யூட்டர் கீ போர்டில் எப்படி இடம் பெற்றது? மொழி வல்லுனர்கள், எப்படி என்பதில், ஒத்துப்போகவில்லை. சிலர் நினைத்தனர், மத்திய காலத்தில் (Early Middle ages), துறவிகள் கையெழுத்துப் ப்ரதிகளை சிரமத்துடன் படிக்கும்பொழுது லத்தீன் மொழி வார்த்தை "ad", "at" or "towards" or "By" என்று பல அர்த்தங்களைக் கொண்டிருப்பதைக் கண்டனர்.

அநேக வல்லுனர்கள் இந்த @ சின்னம் சமீப காலத்தில், அதாவது 18ஆம் நூற்றாண்டில் புழக்கத்திற்கு வந்ததுதான், பொருட்களின் விலையை குறிப்பிட ஏற்பட்டதுதான் என்று வாதாடினர். அதாவது உதாரணமாக 10 பென்சுக்கு 5 ஆப்பிள் ("5 apples @ 10 pence." ).மற்றும் ஒரு மொழி வல்லுனர், ஆராய்ச்சியாளர் Denis Muzerelle சொல்கிறார், இது ஃப்ரெஞ்ச், ஜெர்மானிய, வியாபாரிகள் எழுத்து "a"யை வேகமாக உச்சரிக்கும் பொழுது ஏற்பட்ட திரிபு என்கிறார்.

ஆனால் ஜூலை மாதம் 2000 ஆண்டில் இத்தாலிய ஆரய்ச்சியாளர் ஒருவர், இந்த சின்னம் @ 14ஆம் நூற்றாண்டின் வியாபார தஸ்தாவேஜுகளில் இந்தக் குறி காணப்படுவதைக் கண்டுபிடித்தார். இந்தச் சின்னம் ஒரு அளவை the "anfora," or jar குறிக்க உபயோகிக்கப்பட்டது என்றார்.

Giorgio Stabile 1492ஆம் வருடத்திய லத்தீன் - ஸ்பானிஷ் அகராதியில் "anfora" என்பது "arroba" ( ஒரு நிறுவளளவை) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்தார். ஆகையால், 1885ல் வியாபரரீதியான "a" (the "commercial a") முதல் மாடலான அண்டர்வுட் தட்டச்சு மெஷினில் சேர்க்கப்பட்டது இயற்கையே.

80 வருடங்களுக்குப் பிறகு அங்கிருந்து ஸ்டாண்டெர்ட் கம்ப்யூட்டர் கேரக்டரில் (Such as ASCII) இடம் பெயர்ந்துவிட்டது. (It's therefore natural that, in 1885 the "commercial a" was included on the keyboard of the first model of Underwood typewriter and from there migrated into the standard set of computing characters (such as ASCII) 80 years later. )

தற்போதைய பிரச்சனை இந்த @ சின்னத்தை எப்படி உச்சரிப்பது? ஸ்பானியர்கள் இதை "arroba" என்றும், ஃப்ரெஞ்ச்காரர்கள் "arobase." என்றும், அமெரிக்கர்களும், பிரிட்டிஷாரும் "at-sign." என்றும், ஜெர்மானியர் ("at-Zeichen"), என்றும், எஸ்தோனியர் ("ät-märk") என்றும், ஜப்பானியர் ("atto maak"). என்றும் உச்சரிக்கிறார்கள்.


ஆயினும், அதிகமான பாஷைகளில், இந்த சின்னம், பலதரப்பட்ட உருவகம், பொதுப்படையாக, பிராணிகளுக்கு ஒப்பிட்ப்படுகிறது. ஜெர்மானியர், ஃபின்ஸ், ஹங்கேரியன், போல்ஸ், தெற்கு ஆப்பிரிக்கர்கள், இந்தச் சின்னத்தைக் குரங்க்கின் வாலாகப் பார்க்கிறர்கள். மற்றும் சிலர் நத்தைக்கு ஒப்பிடுகிறார்கள். இப்படியாகப் பலவிதம்.

"However, in most languages the sign is described using a wide spectrum of metaphors lifted from daily life. References to animals are the most common. Germans, Dutch, Finns, Hungarians, Poles and South Africans see it as a monkey tail. The snail - oddly enough for the anti-snail-mail set - portrays the @ sign not only in French ("petit escargot") and Italian ("chiocciola"), but also in Korean and Esperanto ("heliko"). Danes and Swedes call it "snabel-a" - the "a" with an elephant's trunk; Hungarians a worm; Norwegians a pig's tail; Chinese a little mouse; and Russians a டாக்"

உணவு வகைகளும் இதற்கு உருவகம் தந்துள்ளன.

"Food offers other tantalizing metaphors. Swedes have borrowed the cinnamon bun ("kanelbulle"). Czechs have been inspired by the rolled pickled herring ("zavinac") commonly eaten in Prague's pubs. Spaniards sometimes call it "ensaimada," which is a sort of sweet, spiral-shaped bagel typically made in Majorca. Hebrew speakers use "shtrudl" (or "strudel"), as in the well-known roll-shaped pastry. My favorite, though, is the Finnish "miukumauku" - the "sign of the meow"- inspired by a curled-up, sleeping cat."

A Brief History of @ By Bruno Giussani
 
source : http://honey-tamil.blogspot.com/2009/02/blog-post_15.html 

Monday, February 16, 2009

இதயத்தை பாதிக்கும் உடற்பருமன்

உடற்பருமனால் இதயம் பாதிக்கப்படுகிறது என்றால் பலர் நம்பமாட்டார்கள். ஆனால் அதுதான் உண்மை:


உடற்பருமன் உண்டாவதற்கு முக்கியக்காரணங்கள் என்று பார்த்தால், உடலில் சுரக்கும் ஹார்மோன் மாறுபாடுகள், வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை, உணவு முறை ஆகியவையே முக்கிய இடத்தைப்பிடிக்கும். இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்திருக்கும்.


ஹார்மோன் மாறுபாடுகள்:


உடற்பருமன் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது. வயது வித்தியாசமில்லாமல் எல்லாருக்கும் உண்டாகிறது.

ஆண்களுக்கு முன்னாலும் (வயிற்றுப் பகுதி), பெண்களுக்குப் பின்னாலும் (புட்டப் பகுதி) அதிகக்கொழுப்பு சேர்கிறது.
இதுவே ஹார்மோன் மாறுபாடுகளால் உண்டானால் உடல் பருத்திருக்கும்.

சில பெண்கள் பருவவயதில் கொடி இடை... அன்ன நடை, மதிமுகம், மதுக் கிண்ணம்... இப்படி வர்ணிக்கத்தக்க வகையில் அழகாக இருப்பார்கள். முப்பத்தைந்து நாற்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டால் அவர்களை பார்க்க சகிக்காது.

பூசணிக்காய் போல உடற்பருத்து, வாத்து நடையுடன் முட்டியைப்பிடித்துக் கொண்டு நடப்பார்கள். கொஞ்ச தூரம் நடப்பதற்கே பெருமூச்சு வாங்கும். இதற்கு காரணம் அவர்கள் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் என்ற பெண்மை இயக்குநீரின் அளவில் குறைவு ஏற்படுவது தான். இந்த சமயத்தில் கொழுப்பு அதிகரித்து உடல் பருமன் அதிகரிக்கிறது. ரத்த கொழுப்பு அதிகரித்து ரத்த நாளங்கள் சுருங்கி பக்க வாதம், மாரடைப்பு போன்ற பிரச்சினை கள் தலைதூக்குகின்றன. தைராய்டு கோளாறுகளாலும் உடற்பருமன் உண்டாகிறது.

வாழ்க்கை முறை

வீட்டில் தொலைக்காட்சி, பகல் தூக்கம், சீதோஷணம் காரணமாக வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடத்தல், கவலைப்பட்டுக்கொண்டு பட்டினி கிடத்தல், சிறுகச்சிறுக நொறுக்குத் தீனி, என பல காரணங்களைச் சொல்லலாம். நீரிழிவு போன்ற நோய்களாலும் உடற்பருமன் உண்டாகிறது.

உடற்பயிற்சியின்மை

பருமனாக இருப்பவர்கள் உடற்பயிற்சியை மேற்கொண்டு எடையைக் குறைத்தால் இதய பாதிப்புகளை கணிசமாக தவிர்க்கலாம். இவர்கள் ஏரோபிக் பயிற்சி, நடப்பது, நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல், கயிறு தாண்டுதல், ஓடுதல், குனிந்து நிமிர்ந்து ஏதாவது வேலை செய்தல் போன்ற பணிகளைச் செய்யலாம்.

இத்தகைய பயிற்சிகளால் உடல் எடை குறைவதோடு, இரத்தக் கொழுப்பின் அளவும், உடலில் உபரியாக தேக்கி வைக்கப்படுகிற கொலஸ்டிராலின் அளவும் குறையும். தமனிகளில் ஏற்படும் அடைப்பும் நீங்கும்.

இவ்வாறு செய்யாமல் அடுத்தடுத்து சாப்பிட்டு, வெறுமனே பொழுதைக் கழிக்கும்போது உடல் பருமன், பல வீனம் போன்றவை உண்டாகி இதயம் பாதிக்கப்படுகிறது.

உணவுப் பழக்கம்:

உடற்பருமனுக்கு உணவுப் பழக்கம் மிக முக்கியமான ஒன்று. இருந்தும் இதை ஏன் இறுதியாகக் கூறுகிறீர்கள் என நீங்கள் கேட்கலாம்.

பலர் ருசிக்காக, பொழுது போக்குக்காக துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மாமிச வகைகளை சாப்பிடுகிறார்கள். இவை இதயத்திற்கு தீங்கானவை என்பதை அறியாமலேயே:

உணவுப் பொருட்களை கொழுப்புச்சத்து உள்ளவை, நார்ச்சத்து உள்ளவை என இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம்.

கொழுப்புச் சத்து உள்ள உணவுப்பொருட்களுள், மாமிசம், வறுத்த உணவு, எண்ணெய்ப் பொருட்கள், முட்டையின் மஞ்சள் கரு, வெண்ணெய் நீக்கப்படாத பால், பால் பொருட்கள், கிரிம்கள், இனிப்பு போன்றவை முக்கியமானவை. இவற்றை அதிகளவில் சாப்பிடும்போது தேவைக்கு அதிகமான கொழுப்புகள் சேர்த்துவைக்கப்பட்டு உடலின் அளவு பெரிதாகிறது.

நார்ச்சத்துப் பொருட்களில் இத்தகைய கொழுப்புச்சத்துக்கள் குறைவாகவே இருக்கும். தவிர இந்த நார்;ச்சத்துக்கள் போதுமான சக்தியைத் தவிர மற்றவற்றை வெளியேற்றி விடுகின்றன.

சரி, உணவுகளால் கொழுப்பு உண்டாகிறது என்கிறீர்களே, அது எவ்வாறு உண்டாகிறது? அது எப்படி இதயத்தை பாதிக்கிறது என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?

நாம் உயிர் வாழவேண்டுமானால், ஆரோக்கியமாக செயல்பட வேண்டு மானால் கொலஸ்டிரால் என்ற கொழுப்புச்சத்து மிகவும் அவசியம். நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் இந்த கொலஸ்டிரால்லைபோ புரோட்டீன்களாக மாற்றப்பட்டு ரத்த நாளங்கள் வழியாக உடலின் மற்ற இடங்களுக்குக் கடத்தப்படுகிறது.

கொலஸ்டிராலை பல வழிகளில் உடலில் உள்ள ஈரல் உருவாக்கித் தருகிறது. அவற்றில் உணவின் பங்களிப்பு இருபது முதல் முப்பது விழுக்காடு. நமது உடம்புக்கு தேவையான சக்தி களில் 40% கொழுப்பு வடிவத்தில் இருக்கும். இந்த கொழுப்பில் அடர்த்தி அதிகமான கொழுப்பு (எச்.டி.எல்), அடர்த்தி குறைவான கொழுப்பு (எல்.டி.எல்.), மிககுறைவான அடர்த்தியுள்ள கொழுப்பு, மிக அடர்த்தி அதிகமான கொழுப்பு என நான்கு வகைகள் உள்ளன. இதில் பல உட்பிரிவுகளும் உள்ளன.

இவற்றை ஈரல் உண்டாக்கி பிற இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றன. லைப்போபுரோட்டீன்கள் மூலம் செல்லும் கொழுப்புக்கள் ரத்தத்தில் மிதந்து செல்லும். தேவையிருப்பின் சக்தியாக மாற்றப்பட்டு செலவாகும். இல்லாவிட்டால் அப்படியே கொழுப்பாக சேமித்து வைத்துக்கொள்ளும். அடர்த்தி அதிகமான கொழுப்பை நல்ல கொழுப்பு என்றும், அடர்த்தி குறைந்த கொழுப்பை கெட்ட கொழுப்பு என்றும் கூறுகிறோம்.

நல்ல கொழுப்பு அளவு குறைந்தாலும், கெட்ட கொழுப்பின் அளவு கூடினாலும் இதயம் பாதிக்கப்படும். இவை இரண்டுமே இருக்கவேண்டிய அளவுக்குக் கீழ் இருந்தாலும் பிரச்சினைதான்.

இன்னொரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்

நமக்கு தினமும் சராசரியாக இரண்டாயிரம் கலோரி சத்து தேவை. அதிக மாக சாப்பிடும்போது இந்த அளவு கூடுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். உபரியான சத்துகள் க்ளைக்கோஜன், கொழுப்புச்சத்து என மாற்றப்பட்டு உடலில் அங்கங்கே சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் எடை கூடிவிடுகிறது.

எடை கூடினால் எப்போதும் பாரமான ஒரு பையை கழுத்தி கட்டி தொங்கவிட்டிருந்தால் எப்படியிருக்குமோ அப்படி தேவையில்லாமல் உடல் பருமனை சுமக்கவேண்டியிருக்கும். தவிர இதயத்திற்கும் கூடுதலான வேலைப்பளு உண்டாகும். ரத்த அழுத்தம் கூடும். நுரையீரலுக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களால் ரத்த நாளம் குறுக நேரிடும் போது இதய பாதிப்புகள் உண்டாகின்றன. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறையில் மாற்றங்கள், புகைப்பழக்கத்தை கைவிடுதல் போன் றவை மூலம் உடல் எடையை குறைக்கலாம்.

உடல் எடையைக் குறைப்பதற்காக பட்டினி கிடத்தல், வேளை தவறி உண்ணுதல் போன்றவை பலனளிக்காது. ஒரு வேளை உணவு மறுத்து அடுத்த வேளை அதிகம் சாப்பிடுவதாலும், உணவை கட்ட நொறுக்குத் தீனிகளை உண்பதாலும் உடல் எடை அதிகரித்து இதய பாதிப்புகள் உண்டாகின்றன.

source : http://eegarai.darkbb.com/-f14/-t1023.htm