| ஒரு முறை ஒரு வயதான ஜென் துறவி, தனது சீடர்களை அழைத்து, ஒரு இளஞ்சீடனைக் குறிப்பிட்டு, அவன் மெய்யறிவு பெற்று விட்டதாகவும். ஜென்னைப் பற்றி முழுமையாக அறிந்து விட்டான் என்றும் கூறினார். சீடர்களுக்கோ மிகுந்த ஆச்சரியம். அவனை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்த சீடர்கள் பலர் அங்கிருந்தனர். சீடர்கள் அனைவரும், அந்த இளஞ்சீடனைப் பார்த்து, "நீ மெய்யறிவைக் கண்டு விட்டாயா?" என்று கேட்டனர். இளஞ்சீடனும், "ஆம். கண்டு கொண்டேன்." என்றான். சீடர்கள், ஆவல் மிகுதியில், "மெய்யறிவு பெற்ற அனுபவம் எவ்வாறிருந்தது?" என்றனர். இளஞ்சீடனோ, "எப்போதும் போல. அற்புதமாய்." என்று புன்முறுவலுடன் கூறினார். |
Wednesday, May 20, 2009
எப்போதும் போல. அற்புதமாய்.!!!
Wednesday, March 18, 2009
ஜெய்.. ஹொ. ஹொ ஹொ ஹி ஹி..
இந்தியா 15வது மக்களவைக்கான் தேர்தலை எதிர்நோக்கியுள்ள சமயத்தில் தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்க்காக அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகள் பிரச்சாரங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செலவுகள் ரூ10,000 கோடியை தாண்டும் என செய்திகள் வருகின்றன. பல அரசியல் கட்சிகள் தேர்தலில் செய்யும் செலவுகள் கோடிக்கணக்கில் தேர்தல் ஆணையம் எத்தனை சட்டம் போட்டாலும் செலவுகளை கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை. பெரும்பாலன அரசியல் கட்சிகள் தேர்தல் செலவை முதலீடாகவும் அரசதிகாரம் கிடைத்தபின்பு மக்களுக்கு செல்லவேண்டிய பணத்தை அறுவடைசெய்துகொள்கிறார்கள். இந்தியாவில் கட்சிகளுக்கு கிடைக்கும் நிதியின் முக்கிய ஊற்று நாட்டின் பெருமுதலாளிகள். சமீபத்தில் FICCI மற்றும் ASSOCHEM போன்ற கூட்டமைப்புகள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தேர்தல் நிதி சம்பந்தமாக கடிதம் எழுதியுள்ளனர். அதாவது தாங்கள் கட்சிகளுக்கு அளிக்கின்ற தேர்தல் நிதி வெளிப்படையாக இருக்கவேண்டுமாம் அதனால் அமெரிக்காவைப் போன்று Polical Action Commitee (PAC) ஏற்படுத்தி அதன் மூலம் கட்சிகள் பெறும் வாக்குவிகித அடிப்படையில் நிதியை பிரித்துத்தரப்படவேண்டுமாம்.
முதலில் இந்திய ஜனநாயகத்தின் மீதும் தேர்தல் மீதும் ஏன் இந்த முதலாளித்துவ அமைப்புகள் அக்கறை கொள்கின்றனர். மேலும் அரசியல் கட்சிகளுக்கு இவர்கள் ஏன் நிதி அளிக்கவேண்டும் என கேள்விஎழுகிறது. அரசியல் கட்சிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள உறவு என்ன? இந்திய நாட்டில் செயல்படும் அரசியல் கட்சிகள் மக்களுக்காக நாட்டின் பெரும்பான்மை மக்களின் நலன்களைக் காக்க மட்டும் செயல்படுமேயானால் கார்ப்பரேட்டுகள் தரும் தேர்தல் இன்னபிற நிதியை ஏற்கக்கூடாது. இந்திய நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு அரசியல் கட்சிகள் செயல்படும் விதம் பற்றி அறியாமல் உள்ளனர். அரசியல் ஒரு சாக்கடை என்று பலரும் ஒதுங்கியிருப்பதால் பல அரசியல் கட்சிகள் மகிழ்ச்சிகொள்கின்றன. கேள்வி கேட்காதவரை அவர்களுக்கு பிரச்சனையில்லை,ஊடகங்களும் மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை. சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் DNA என்ற அமைப்பு இந்தியாவில் தேர்தல் நிதி என்ற பெயரில் அரசியல் கட்சிகள் நாட்டிம் பெருமுதலாளிகளிடம் பெற்ற நிதி விவரங்களை வெளியிட்டுள்ளது, இந்தியாவில் CPI-M,CPI கட்சிகள் தவிர மற்ற எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் நிதியை பெருமுதலாளிகளிடமிருந்து பெற்றுள்ளன. சென்ற ஆண்டில் அரசியல் கட்சிகளின் வருமானவரி தாக்கல் வெளிப்படையாக கொடுக்க CPI-M &CPI தவிற எல்லா அரசியல் கட்சிகளும் மறுத்துவிட்டன.http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=c588cb0c-1450-43a8-8a3c-72f1c0972e8c
சமீபத்தில் பாஜக வின் தில்லி அலுவலகத்தில் ரூ2.6 கோடி பணம் களவுபோய்விட்டதாக செய்தி வந்தது ஆனால் புகார் எதுவும் செய்யவில்லை ஏனென்றால் அது கள்ளப்பணம் கணக்கில் வராத பணம் திருடியவனை சட்டபூர்வமாக ஒன்றும் செய்ய முடியாமல் திருடனுக்கு தேள்கொட்டிய கதையாகிவிட்டது.
பெரிய தேசியக் கட்சிகளான பாஜகவும் காங்கிரசும் 2003-2007 இடைப்பட்ட காலத்தில் மட்டும் தலா ரூ 52 கோடிக்கும் மேல் பெற்றுள்ளனர். இப்படி பெறப்பட்ட நிதிக்கு எவ்வாறு கைமாறு செய்கிறார்கள்? கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் வாஜ்பாயி தலைமையிலான ஆட்சியிலும் தற்போது நடைபெற்றுவரும் மன்மோகன் ஆட்சியிலும் முன்னெப்பபோதும் இல்லாத அளவிற்கு நாட்டில் உலகமயத்தின் பெயரால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன, நாட்டில் 5 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தங்கள் மூலதனத்தை பல மடங்கு பெருக்கியுள்ளனர்.ஆசியாவிலேயே இந்தியாவில் தான் அதிக பண்க்காரர்கள் உள்ளனர் வறுமைக்கோடிற்கும் கீழேயும் அதிக மக்கள் நம் நாட்டில் தான் உள்ளனர். நாட்டின் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதில் நமது நிதியமைச்சர் பெருமுதலாளிகளிடம் கலந்தாலோசிக்காமல் முடிவெடுப்பதில்லை.வரிஏய்ப்பை மறைக்கவும்,வரிபாக்கிவைப்பவர்களைக் காப்பற்றவும் வராக்கடன்களின் மேல் நடவடிக்கை எடுக்காமலிருக்கவும் தனியார்மயமாக்கத்தில் கருணை காட்டுவதிலும் இன்னபிற விசயங்களில் கைமாறு செய்யப்படுகிறது.
2003 முதல் 2007 வரை நிதியளித்த முக்கிய நிறுவனங்களும் அரசியல் கட்சிகளும்.http://www.dnaindia.com/report.asp?newsid=1236392
ஆதித்ய பிர்லா-
காங்கிரசுக்கு- ரூ 21.71 கோடி
பாஜகவிற்கு- ரூ 2.96 கோடி
ஸ்டெர்லைட் குழுமம்
பாஜகவிற்கு- ரூ 9.5 கோடி (2000ம் ஆண்டில் BALCO நிறுவனத்தின் 51% பங்குகளை பெற்ற போது காங்கிரசிற்கு ரூ 1 கோடியும் பாஜகவிற்கு ரூ 50 இலட்சமும் தரப்பட்டது)
வீடியோகான்
காங்கிரசுக்கு- ரூ 4.50 கோடி
பாஜகவிற்கு- ரூ 3.50கோடி
சிவசேனாவிற்கு ரூ 2.63 கோடி
டாடா
காங்கிரசுக்கு- ரூ 4.32 கோடி
பாஜகவிற்கு- ரூ 2.67 கோடி
சிவசேனாவிற்கு ரூ 60.94 இலட்சம்
தெலுங்கு தேசத்திற்கு ரூ48.48 இலட்சம்
அதானி குழுமம்(குஜராத்)
பாஜகவிற்கு- ரூ 4 கோடி
காங்கிரசுக்கு- ரூ 20 இலட்சம்
ஐடிசி
காங்கிரசுக்கு- ரூ 1.45 கோடி
பாஜகவிற்கு- ரூ 1.38 கோடி
சிவசேனாவிற்கு ரூ 12 இலட்சம்
சமாஜ்வாதி கட்சிக்கு ரூ36இலட்சம்
தெலுங்கு தேசத்திற்கு ரூ 14.5 இலட்சம்
ஐக்கிய ஜனதாதள் - ரூ8 இலட்சம்
அதிமுகவிற்கு - ரூ 5 இலட்சம்
எல்&டி குழுமம்
காங்கிரசுக்கு- ரூ 1 கோடி
பாஜகவிற்கு- ரூ 1.60 கோடி
சிவசேனாவிற்கு ரூ 35 கோடி
மஹிந்திரா குழுமம்
ரூ 2.20 கோடியை காங்கிரஸ், பாஜக சிவசேனா மற்றும் தெலுங்கு தேசத்திற்கு பிரித்துக்கொடுத்துள்ளது.
பாஜாஜ்
பாஜகவிற்கு- ரூ 1 கோடி
காங்கிரசுக்கு- ரூ 1 கோடி
ஜிண்டால்
காங்கிரசுக்கு- ரூ 1 கோடி
பாஜகவிற்கு- ரூ 75 இலட்சம்
ஜிஎம்ஆர் குழுமம்
பாஜகவிற்கு- ரூ 1 கோடி
காங்கிரசுக்கு- ரூ 25 இலட்சம்
விஜய் மல்லயா
பாஜகவிற்கு- ரூ 1 கோடி (2004-05 வருடம்)
அம்பானிகள் “அளி”த்ததைப்பற்றி தகவல் இல்லாவிட்டாலும் பெரிய டோனர்களாக அவர்கள் தான் இருப்பார்கள்.
பாமக வும் ரூ2.86 கோடியை பெற்றுள்ளது யாரிடமிருந்து என் தெரியவில்லை.
இந்தப்பட்டியல் நீண்டுகொண்டேயிருப்பதால் தயைகூர்ந்து இணைத்துள்ள லிங்கைப் படிக்கவும்
source : http://arivoliiyakkam.blogspot.com/2009/03/blog-post_12.html
Saturday, March 14, 2009
வாழ்க்கையின் பொருள் !!!
ஒரு கல்லூரியில் ஒன்றாக படித்த சில மாணவர்கள், படித்து முடித்து சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கல்லூரியில் சந்திக்கின்றனர். அப்போது, கல்லூரி வாழ்க்கையைப் போல வெளி உலக வாழ்க்கை சந்தோசமானதாக இல்லை என்றும் வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கின்றது என்றும் அலுத்துக் கொள்கின்றனர்.
அப்போது அங்கு வந்த அவர்களது முன்னாள் பேராசிரியர் அவர்களை தன் வீட்டிற்கு தேநீர் விருந்துக்கு அழைக்கிறார். சுவையில் சிறந்த அவர் வீட்டு தேநீர் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தமானது.
அவரது வீட்டில் தேநீர் பல்வேறு விதமான கோப்பைகளில் பரிமாறப் படுகின்றது. சில கோப்பைகள் சாதாரணமானவை, சில கோப்பைகள் அழகானவை, சில கோப்பைகள் விலை உயர்ந்தவை, வேறு சிலவோ பிரத்யேகமாக கலை அழகோடு வடிவமைக்கப் பட்டவை.
அந்த மாணவர்கள், அழகற்ற கோப்பைகளை தவிர்த்து விட்டு அழகிய கோப்பைகளிலேயே தேநீர் அருந்த விரும்புகின்றனர். கலை வடிவம் மிக்க தேநீர் கோப்பைக்காக அவர்களிடையே சிறிய போட்டி கூட நடக்கிறது.
ஒருவழியாக, தமக்கான கோப்பையை தேர்வு செய்து, மாணவர்கள் அனைவரும் தேநீர் அருந்தும் போது அங்கு வந்த பேராசிரியர் சிறிய விளக்க உரை நிகழ்த்துகிறார். அது இங்கே.
"ஒரு விஷயத்தை நான் கவனித்தேன். நீங்கள் அனைவரும் அழகில் சிறந்த, விலை உயர்ந்த கோப்பைகளிலேயே தேநீர் அருந்த விரும்பினீர்கள். ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கென சிறந்ததையே தேர்ந்தெடுக்க விரும்புகிறான். இது மிகவும் இயல்பான விஷயம்தான் என்றாலும் பல பிரச்சினைகளின் மூல காரணம் அதில்தான் உள்ளது.
நீங்கள் கஷ்டப் பட்டு போராடி தேர்வு செய்த கோப்பைகள், தேநீருக்கு எந்த ஒரு தனிச் சுவையையும் கூட்ட வில்லை. சொல்லப் போனால், கலைநயம் மிக்க சில கோப்பைகள், எளிதில் தேநீர் அருந்த, அதன் சுவையை முழுமையாக உணர தடையாகவே இருந்தன.
உண்மையில், என் வீட்டிற்கு நீங்கள் வந்தது சுவையான தேநீரை அருந்தவே. கலை நயம் மிகுந்த கோப்பைகளை உபயோகிக்க அல்ல.
ஆனாலும், தேநீர் அருந்த வந்த உங்கள் கவனம், கோப்பைகளைப் பார்த்தவுடன் திசை மாறி விட்டது. அதிலும், உங்கள் கையில் உள்ள கோப்பை மீது இருந்த கவனத்தை விட அடுத்தவர் கையில் என்ன கோப்பை உள்ளது என்பதில்தான் அதிக கவனம் இருந்தது.
நண்பர்களே! இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்க்கை என்பது கூட சுவையான தேநீர் போன்றது. இடையில் வந்து போகும் பதவி, பணம், புகழ் எல்லாமே, அந்த வாழ்க்கையை தாங்கிப் பிடிக்க உதவும் கோப்பைகள் மட்டுமே.
மேற்சொன்ன பணம் பதவி போன்ற விஷயங்கள் எதுவும் வாழ்க்கை எனும் தேநீரின் சுவையை மாற்றுவதில்லை. ஆனால் பல சமயங்களில், கோப்பைகளில் அதிக கவனம் செலுத்தும் நாம் வாழ்க்கையை முழுமையாக சுவைக்க மறந்து விடுகிறோம். பலர் இது போல காலப் போக்கில் வாழ்க்கை எனும் தேநீரின் உண்மையான சுவை மறந்து போய் இயந்திரகதியாக வாழ ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்! மகிழ்ச்சியாக வாழும் மனிதர்களுக்கு எல்லாவற்றிலும் உயர்ந்த விஷயங்கள் கிடைப்பதில்லை. அவர்கள் தங்களுக்கு கிடைத்த தேநீரை முழுமையாக சுவைப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதை தாங்கிப் பிடிக்கும் கோப்பைகளில் அல்ல.
அதிகமான பொருட்கள் வைத்திருப்பவன் உண்மையான பணக்காரன் இல்லை. குறைவாக தேவைகள் உள்ளவனே பெரிய பணக்காரன். "
இவ்வாறு அவர் உரைத்ததும், அந்த மாணவர்களுக்கு வாழ்க்கை பற்றி கொஞ்சம் விளங்கியது போல இருந்தது. இந்த முறை தேநீரின் சுவையை முழுமையாக ருசித்து பின்னர் கலைந்து போனார்கள்.
எனக்கு இந்த கதை பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.
வாருங்கள். ஒரு நல்ல டீ சாப்பிட்டுக் கொண்டே யோசிப்போம்.
Source : http://sandhainilavaram.blogspot.com/2009/03/blog-post_12.html
Monday, March 2, 2009
நான் கடவுளா??!!
ஆரம்ப காலங்களில் இந்த தத்துவத்தை எளிதாக சொல்லப் போய் அது கை கால்கள் முளைத்து வேறு வடிவத்துக்கு வந்து விட்டது.சரி அப்படியென்றால் கோவில்கள் எதற்கு?அவை எனர்ஜியை சேமிக்கும் பெரிய பாட்டரி.கோவிலுக்கு போனால் அது உங்களுக்குள் புகும் என்பதால்தான்.உங்களிடம் இருந்து கோவிலுக்குள்ளும் பரவும்.அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்திற்கு.எனவேதான் பழைமையான கோவில்களில் ஒரு தனி நிம்மதி relaxation ஐ உணர்கிறீர்கள் .புதிதாக கட்டப்பட்ட கோவில்களில் அது கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு.
சரி நாம் செய்யும் பிரார்த்தனைகள் நிறைவேறுவது எப்படி ? அல்லது நிறைவேறாமல் போவது எப்படி?என்றால் அதற்கு நீங்கள்தான் காரணம். ஒரு சரியான, மனம் ஒருமுகப்பட்ட , பிரார்த்தனை நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.அது அந்த இடத்தில் பல மடங்காக replicate ஆகிறது .அப்படி பிரார்த்தித்தால் கோவிலில்தான் என்று இல்லை எங்கும் அது நிகழ வாய்ப்பு உண்டு.செயல்படுவது முழுக்க முழுக்க உங்கள் கைகளில்தான் இருக்கிறது.இதைப் பற்றி தனியாக ஒரு பதிவே போடலாம்.ஏனெனில் இந்தப் பதிவைப் படிக்கும் போதே உங்களுக்கு புரிந்திருக்கும் எனக்கு எதையும் சுருக்கமா சொல்லத் தெரியாதுன்னு.
Tuesday, February 17, 2009
மக்களின் மீது மறைமுக வரி விதிப்பு ?
பொருளாதார தேக்கத்திலிருந்து இந்தியா மீள்வதற்காக வரிச் சலுகைகள், வரி விலக்குகள், வரி குறைப்புகள், வரி தள்ளுபடிகள், வரி விடுமுறைகள் என்றெல்லாம் வாரி வழங்கப் படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த பொது மக்கள், பொருளாதார நிபுணர்கள், தொழிற் துறையினர் ஆகியோருக்கு மத்திய அரசு அளித்த அதிர்ச்சி வைத்தியம் இந்த "மறைமுக வரி விதிப்பு". இது குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.(Courtesy:econjournal.com)
ஒரு நாட்டின் அரசின் வரவு செலவில் ஏற்படும் "துண்டு" இறுதியாக அந்த நாட்டின் மக்களின் மீதுதான் மறைமுகமாக சாத்தப் படுகிறது. இந்த "துண்டிற்கு" வெவ்வேறு வடிவங்கள் உண்டு.
ஒரு அரசு தனது செலவிற்கு போதிய பணம் கிடைக்காமல் போகும் பட்சத்தில் கடைசியாக கை வைக்கும் இடம் மக்களின் (முக்கியமாக நடுத் தர, எளிய மக்களின்) "பாக்கெட்". காலபோக்கில் மக்களின் உபயோகப் பொருட்களின் மீது அதிகரிக்கப் படும் நேரடி மற்றும் மறைமுக வரிகள், போக்குவரத்து, குடிநீர் போன்ற அரசு நிறுவனங்களின் சேவை கட்டணங்கள் அதிகரிப்பு என்று அரசு தனது நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க மக்களிடமிருந்தே பணம் "வசூல்" செய்ய வேண்டியிருக்கிறது.
இதற்கு மாற்று வழியாக, தலைமை வங்கியிடமிருந்து அரசு அதிக கடன் பெற முயற்சி செய்யும் பட்சத்தில் புதிய "கரன்சி" நோட்டுகள் அடிக்க வேண்டியதாகிறது. இதனால், நாட்டில் விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்ற சிக்கல்கள் ஏற்பட்டு மீண்டும் அப்பாவி மக்களே பாதிக்கப் படுகின்றனர். ஒருவேளை நோட்டு அச்சடிக்கப் படா விட்டால், அரசு உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் அதிக கடன் வாங்க வேண்டியிருக்கும். அப்போதோ, நாட்டில் கடும் நிதி நெருக்கடி மற்றும் தட்டுப் பாடு நேரிடும்.
ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு நிதி நெருக்கடி ஏற்படும் போது, அந்நாடு சர்வதேச தரவரிசையில் கீழே இறங்குகிறது. ஏற்கனவே நம் நாட்டின் தரவரிசை மிகவும் கீழே. அதாவது BBB-. இது இடைகால பட்ஜெட்டிற்கு பின்னர் இன்னும் குறைக்கப் படலாம் என்று தெரிகிறது. இதனால் உலக சந்தையில் நம்நாட்டின் கரன்சியின் மதிப்பு மேலும் குறைந்து இறக்குமதி செலவுகள் அதிகமாகும். இதனால், உள்நாட்டில் விலைவாசி விரைவாக ஏறும் வாய்ப்பு உள்ளது.
மேலும், ஒரு அரசின் நிதிப் பற்றாக்குறையானது, அந்நாட்டில் புதிய மக்கள் நல திட்டங்கள், அடிப்படை கட்டுமான வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை ஆரம்பிக்க பெரும் தடையாக இருக்கும். இதனால், மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கும்.
எப்படிப் பார்த்தாலும், ஒரு நாட்டின் அரசிற்கு பட்ஜெட்டில் விழும் துண்டானது நாட்டின் மக்களையே அதிகம் பாதிப்பதனால்தான், பட்ஜெட் பற்றாக்குறையை "மறைமுக வரி விதிப்பு" என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
இப்போது இந்தியாவின் கதைக்கு வருவோம்.
மத்திய அரசின் நடப்பு நிதியாண்டின் (2008-09) நிதித் தட்டுப்பாடு (Fiscal Deficit) எவ்வளவு தெரியுமா? கொஞ்சம் மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்! சுமார் மூன்று லட்சத்து இருபதினாயிரம் கோடி ரூபாய். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் ஆறு சதவீதம். கடந்த நிதியாண்டில் இது வெறும் 2.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத் தக்கது. மேலே சொன்ன தொகையோடு, பெட்ரோல் மானியம் மற்றும் உர மானியத்திற்கான (சுமார்) 95,000 கோடி ரூபாயையும் கூட்டி கொண்டால் வரும் நிதிப் பற்றாக்குறை அளவு கிட்டத்தட்ட 4,15,000 கோடி ரூபாய். (குழந்தைகள் முதல் மரணப் படுக்கையில் இருப்பவர் வரை ஒவ்வொரு இந்தியனுக்கு சராசரியாக விழப் போகிற "துண்டு" சுமார் 4,100 ரூபாய். இது மத்திய அரசு வகையில் மட்டும்தான். இன்னும் மாநில அரசுகள், மாநகராட்சிகள், கிராம பஞ்சாயத்துக்கள் என பல அரசு அமைப்புகளாலும் மக்களுக்கு போடப் படும் "துண்டுகளின்" பாரம் தாங்காமல் மக்கள் மயங்கி விழ வேண்டியிருக்கும்.)
நாட்டினை பொருளாதார தேக்கத்திலிருந்து மீட்பதற்காகவே இவ்வாறு அரசு செலவினங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளன என்று சிலர் கூறிக் கொள்வது எந்த அளவிற்கு உண்மை என்று அரசின் நிதி நிலை அறிக்கையை சற்று கூர்ந்து படித்தாலே புரிந்து கொள்ள முடியும்.
ஒரு அரசின் செலவினங்களில் இரு வகை உண்டு. அதாவது, அரசின் நிர்வாக செலவுகள் (Non Plan Expenditure) மற்றும் மக்கள் நல மற்றும் இதர அடிப்படை கட்டுமானத்திற்கான திட்ட செலவினங்கள் (Plan Expenditure). நடப்பு நிதியாண்டிற்கான மதிப்பீட்டிலிருந்து அரசின் நிர்வாக செலவுகள் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி அதிகமாகி உள்ளது. திட்ட செலவுகள் சுமார் நாற்பதினாயிரம் கோடி அதிகமாகி உள்ளது. எனவே அரசின் அதிகப் படியான நிர்வாக செலவே இந்த நிதிப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என்று புரிந்து கொள்ள முடியும்.
இன்றைக்கு நாடிருக்கும் பொருளாதார நிலையில், பொது மக்களை விட அரசுக்கு அதிக பொறுப்புகள் உண்டு. மேலும், குறைந்த அளவிலேயே கைவசம் உள்ள பணத்தை மிச்சப் படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதைக்கு திருப்பி விடுவதில் மத்திய அரசு மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
இதில் இந்த அரசுக்கு மட்டுமல்ல அடுத்து அமையப் போகும் அரசுக்கும் நிறைய கடமைகள் இருக்கின்றன.
மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது...?
ஒவ்வொருவருடைய மின் அஞ்சல் முகவரியிலும் "@" என்ற சின்னம் வருவது யாவரும் அறிந்ததே. இந்தச் சின்னம் எப்படிப் புழக்கத்தில் வந்தது?மின் அஞ்சல் முகவரியில் முதன் முதலாக இந்த @ சிம்னத்தை உபயோகித்தது "ரே டாம்லின்ஸன்" (Ray Tomlinson) என்னும் ஒரு கம்ப்யூட்டர் பொறியாளர். இவர் 1971ஆம் ஆண்டு முதலில் தனக்குத் தானே ஒரு மின் அஞ்சலை இந்தச் சின்னத்தை உபயோகித்து அனுப்பிக்கொண்டார்.
ஏன் இவர் இந்தச் சின்னத்தை தேர்ந்தெடுத்தார்? அவர் சொல்கிறார், " கீ போர்டில் அக்கரையுடன் பார்த்தேன் எவருடைய பெயரிலிலும் வராததும், குழப்பம் விளைவிக்காததுமாக சின்னம் இருக்கிறதா என்று, பின் இதைத் தேர்ந்தெடுத்தேன்." என்று சொன்னார்.
இந்த @ சின்னம் கம்ப்யூட்டர் கீ போர்டில் எப்படி இடம் பெற்றது? மொழி வல்லுனர்கள், எப்படி என்பதில், ஒத்துப்போகவில்லை. சிலர் நினைத்தனர், மத்திய காலத்தில் (Early Middle ages), துறவிகள் கையெழுத்துப் ப்ரதிகளை சிரமத்துடன் படிக்கும்பொழுது லத்தீன் மொழி வார்த்தை "ad", "at" or "towards" or "By" என்று பல அர்த்தங்களைக் கொண்டிருப்பதைக் கண்டனர்.
அநேக வல்லுனர்கள் இந்த @ சின்னம் சமீப காலத்தில், அதாவது 18ஆம் நூற்றாண்டில் புழக்கத்திற்கு வந்ததுதான், பொருட்களின் விலையை குறிப்பிட ஏற்பட்டதுதான் என்று வாதாடினர். அதாவது உதாரணமாக 10 பென்சுக்கு 5 ஆப்பிள் ("5 apples @ 10 pence." ).மற்றும் ஒரு மொழி வல்லுனர், ஆராய்ச்சியாளர் Denis Muzerelle சொல்கிறார், இது ஃப்ரெஞ்ச், ஜெர்மானிய, வியாபாரிகள் எழுத்து "a"யை வேகமாக உச்சரிக்கும் பொழுது ஏற்பட்ட திரிபு என்கிறார்.
ஆனால் ஜூலை மாதம் 2000 ஆண்டில் இத்தாலிய ஆரய்ச்சியாளர் ஒருவர், இந்த சின்னம் @ 14ஆம் நூற்றாண்டின் வியாபார தஸ்தாவேஜுகளில் இந்தக் குறி காணப்படுவதைக் கண்டுபிடித்தார். இந்தச் சின்னம் ஒரு அளவை the "anfora," or jar குறிக்க உபயோகிக்கப்பட்டது என்றார்.
Giorgio Stabile 1492ஆம் வருடத்திய லத்தீன் - ஸ்பானிஷ் அகராதியில் "anfora" என்பது "arroba" ( ஒரு நிறுவளளவை) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்தார். ஆகையால், 1885ல் வியாபரரீதியான "a" (the "commercial a") முதல் மாடலான அண்டர்வுட் தட்டச்சு மெஷினில் சேர்க்கப்பட்டது இயற்கையே.
80 வருடங்களுக்குப் பிறகு அங்கிருந்து ஸ்டாண்டெர்ட் கம்ப்யூட்டர் கேரக்டரில் (Such as ASCII) இடம் பெயர்ந்துவிட்டது. (It's therefore natural that, in 1885 the "commercial a" was included on the keyboard of the first model of Underwood typewriter and from there migrated into the standard set of computing characters (such as ASCII) 80 years later. )
தற்போதைய பிரச்சனை இந்த @ சின்னத்தை எப்படி உச்சரிப்பது? ஸ்பானியர்கள் இதை "arroba" என்றும், ஃப்ரெஞ்ச்காரர்கள் "arobase." என்றும், அமெரிக்கர்களும், பிரிட்டிஷாரும் "at-sign." என்றும், ஜெர்மானியர் ("at-Zeichen"), என்றும், எஸ்தோனியர் ("ät-märk") என்றும், ஜப்பானியர் ("atto maak"). என்றும் உச்சரிக்கிறார்கள்.
ஆயினும், அதிகமான பாஷைகளில், இந்த சின்னம், பலதரப்பட்ட உருவகம், பொதுப்படையாக, பிராணிகளுக்கு ஒப்பிட்ப்படுகிறது. ஜெர்மானியர், ஃபின்ஸ், ஹங்கேரியன், போல்ஸ், தெற்கு ஆப்பிரிக்கர்கள், இந்தச் சின்னத்தைக் குரங்க்கின் வாலாகப் பார்க்கிறர்கள். மற்றும் சிலர் நத்தைக்கு ஒப்பிடுகிறார்கள். இப்படியாகப் பலவிதம்."However, in most languages the sign is described using a wide spectrum of metaphors lifted from daily life. References to animals are the most common. Germans, Dutch, Finns, Hungarians, Poles and South Africans see it as a monkey tail. The snail - oddly enough for the anti-snail-mail set - portrays the @ sign not only in French ("petit escargot") and Italian ("chiocciola"), but also in Korean and Esperanto ("heliko"). Danes and Swedes call it "snabel-a" - the "a" with an elephant's trunk; Hungarians a worm; Norwegians a pig's tail; Chinese a little mouse; and Russians a டாக்"
உணவு வகைகளும் இதற்கு உருவகம் தந்துள்ளன.
"Food offers other tantalizing metaphors. Swedes have borrowed the cinnamon bun ("kanelbulle"). Czechs have been inspired by the rolled pickled herring ("zavinac") commonly eaten in Prague's pubs. Spaniards sometimes call it "ensaimada," which is a sort of sweet, spiral-shaped bagel typically made in Majorca. Hebrew speakers use "shtrudl" (or "strudel"), as in the well-known roll-shaped pastry. My favorite, though, is the Finnish "miukumauku" - the "sign of the meow"- inspired by a curled-up, sleeping cat."
A Brief History of @ By Bruno Giussani
Monday, February 16, 2009
இதயத்தை பாதிக்கும் உடற்பருமன்
உடற்பருமனால் இதயம் பாதிக்கப்படுகிறது என்றால் பலர் நம்பமாட்டார்கள். ஆனால் அதுதான் உண்மை:
உடற்பருமன் உண்டாவதற்கு முக்கியக்காரணங்கள் என்று பார்த்தால், உடலில் சுரக்கும் ஹார்மோன் மாறுபாடுகள், வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை, உணவு முறை ஆகியவையே முக்கிய இடத்தைப்பிடிக்கும். இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்திருக்கும்.
ஹார்மோன் மாறுபாடுகள்:
உடற்பருமன் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது. வயது வித்தியாசமில்லாமல் எல்லாருக்கும் உண்டாகிறது.
ஆண்களுக்கு முன்னாலும் (வயிற்றுப் பகுதி), பெண்களுக்குப் பின்னாலும் (புட்டப் பகுதி) அதிகக்கொழுப்பு சேர்கிறது.
இதுவே ஹார்மோன் மாறுபாடுகளால் உண்டானால் உடல் பருத்திருக்கும்.
சில பெண்கள் பருவவயதில் கொடி இடை... அன்ன நடை, மதிமுகம், மதுக் கிண்ணம்... இப்படி வர்ணிக்கத்தக்க வகையில் அழகாக இருப்பார்கள். முப்பத்தைந்து நாற்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டால் அவர்களை பார்க்க சகிக்காது.
பூசணிக்காய் போல உடற்பருத்து, வாத்து நடையுடன் முட்டியைப்பிடித்துக் கொண்டு நடப்பார்கள். கொஞ்ச தூரம் நடப்பதற்கே பெருமூச்சு வாங்கும். இதற்கு காரணம் அவர்கள் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் என்ற பெண்மை இயக்குநீரின் அளவில் குறைவு ஏற்படுவது தான். இந்த சமயத்தில் கொழுப்பு அதிகரித்து உடல் பருமன் அதிகரிக்கிறது. ரத்த கொழுப்பு அதிகரித்து ரத்த நாளங்கள் சுருங்கி பக்க வாதம், மாரடைப்பு போன்ற பிரச்சினை கள் தலைதூக்குகின்றன. தைராய்டு கோளாறுகளாலும் உடற்பருமன் உண்டாகிறது.
வாழ்க்கை முறை
வீட்டில் தொலைக்காட்சி, பகல் தூக்கம், சீதோஷணம் காரணமாக வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடத்தல், கவலைப்பட்டுக்கொண்டு பட்டினி கிடத்தல், சிறுகச்சிறுக நொறுக்குத் தீனி, என பல காரணங்களைச் சொல்லலாம். நீரிழிவு போன்ற நோய்களாலும் உடற்பருமன் உண்டாகிறது.
உடற்பயிற்சியின்மை
பருமனாக இருப்பவர்கள் உடற்பயிற்சியை மேற்கொண்டு எடையைக் குறைத்தால் இதய பாதிப்புகளை கணிசமாக தவிர்க்கலாம். இவர்கள் ஏரோபிக் பயிற்சி, நடப்பது, நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல், கயிறு தாண்டுதல், ஓடுதல், குனிந்து நிமிர்ந்து ஏதாவது வேலை செய்தல் போன்ற பணிகளைச் செய்யலாம்.
இத்தகைய பயிற்சிகளால் உடல் எடை குறைவதோடு, இரத்தக் கொழுப்பின் அளவும், உடலில் உபரியாக தேக்கி வைக்கப்படுகிற கொலஸ்டிராலின் அளவும் குறையும். தமனிகளில் ஏற்படும் அடைப்பும் நீங்கும்.
இவ்வாறு செய்யாமல் அடுத்தடுத்து சாப்பிட்டு, வெறுமனே பொழுதைக் கழிக்கும்போது உடல் பருமன், பல வீனம் போன்றவை உண்டாகி இதயம் பாதிக்கப்படுகிறது.
உணவுப் பழக்கம்:
உடற்பருமனுக்கு உணவுப் பழக்கம் மிக முக்கியமான ஒன்று. இருந்தும் இதை ஏன் இறுதியாகக் கூறுகிறீர்கள் என நீங்கள் கேட்கலாம்.
பலர் ருசிக்காக, பொழுது போக்குக்காக துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மாமிச வகைகளை சாப்பிடுகிறார்கள். இவை இதயத்திற்கு தீங்கானவை என்பதை அறியாமலேயே:
உணவுப் பொருட்களை கொழுப்புச்சத்து உள்ளவை, நார்ச்சத்து உள்ளவை என இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம்.
கொழுப்புச் சத்து உள்ள உணவுப்பொருட்களுள், மாமிசம், வறுத்த உணவு, எண்ணெய்ப் பொருட்கள், முட்டையின் மஞ்சள் கரு, வெண்ணெய் நீக்கப்படாத பால், பால் பொருட்கள், கிரிம்கள், இனிப்பு போன்றவை முக்கியமானவை. இவற்றை அதிகளவில் சாப்பிடும்போது தேவைக்கு அதிகமான கொழுப்புகள் சேர்த்துவைக்கப்பட்டு உடலின் அளவு பெரிதாகிறது.
நார்ச்சத்துப் பொருட்களில் இத்தகைய கொழுப்புச்சத்துக்கள் குறைவாகவே இருக்கும். தவிர இந்த நார்;ச்சத்துக்கள் போதுமான சக்தியைத் தவிர மற்றவற்றை வெளியேற்றி விடுகின்றன.
சரி, உணவுகளால் கொழுப்பு உண்டாகிறது என்கிறீர்களே, அது எவ்வாறு உண்டாகிறது? அது எப்படி இதயத்தை பாதிக்கிறது என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?
நாம் உயிர் வாழவேண்டுமானால், ஆரோக்கியமாக செயல்பட வேண்டு மானால் கொலஸ்டிரால் என்ற கொழுப்புச்சத்து மிகவும் அவசியம். நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் இந்த கொலஸ்டிரால்லைபோ புரோட்டீன்களாக மாற்றப்பட்டு ரத்த நாளங்கள் வழியாக உடலின் மற்ற இடங்களுக்குக் கடத்தப்படுகிறது.
கொலஸ்டிராலை பல வழிகளில் உடலில் உள்ள ஈரல் உருவாக்கித் தருகிறது. அவற்றில் உணவின் பங்களிப்பு இருபது முதல் முப்பது விழுக்காடு. நமது உடம்புக்கு தேவையான சக்தி களில் 40% கொழுப்பு வடிவத்தில் இருக்கும். இந்த கொழுப்பில் அடர்த்தி அதிகமான கொழுப்பு (எச்.டி.எல்), அடர்த்தி குறைவான கொழுப்பு (எல்.டி.எல்.), மிககுறைவான அடர்த்தியுள்ள கொழுப்பு, மிக அடர்த்தி அதிகமான கொழுப்பு என நான்கு வகைகள் உள்ளன. இதில் பல உட்பிரிவுகளும் உள்ளன.
இவற்றை ஈரல் உண்டாக்கி பிற இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றன. லைப்போபுரோட்டீன்கள் மூலம் செல்லும் கொழுப்புக்கள் ரத்தத்தில் மிதந்து செல்லும். தேவையிருப்பின் சக்தியாக மாற்றப்பட்டு செலவாகும். இல்லாவிட்டால் அப்படியே கொழுப்பாக சேமித்து வைத்துக்கொள்ளும். அடர்த்தி அதிகமான கொழுப்பை நல்ல கொழுப்பு என்றும், அடர்த்தி குறைந்த கொழுப்பை கெட்ட கொழுப்பு என்றும் கூறுகிறோம்.
நல்ல கொழுப்பு அளவு குறைந்தாலும், கெட்ட கொழுப்பின் அளவு கூடினாலும் இதயம் பாதிக்கப்படும். இவை இரண்டுமே இருக்கவேண்டிய அளவுக்குக் கீழ் இருந்தாலும் பிரச்சினைதான்.
இன்னொரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்
நமக்கு தினமும் சராசரியாக இரண்டாயிரம் கலோரி சத்து தேவை. அதிக மாக சாப்பிடும்போது இந்த அளவு கூடுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். உபரியான சத்துகள் க்ளைக்கோஜன், கொழுப்புச்சத்து என மாற்றப்பட்டு உடலில் அங்கங்கே சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் எடை கூடிவிடுகிறது.
எடை கூடினால் எப்போதும் பாரமான ஒரு பையை கழுத்தி கட்டி தொங்கவிட்டிருந்தால் எப்படியிருக்குமோ அப்படி தேவையில்லாமல் உடல் பருமனை சுமக்கவேண்டியிருக்கும். தவிர இதயத்திற்கும் கூடுதலான வேலைப்பளு உண்டாகும். ரத்த அழுத்தம் கூடும். நுரையீரலுக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.
புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களால் ரத்த நாளம் குறுக நேரிடும் போது இதய பாதிப்புகள் உண்டாகின்றன. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறையில் மாற்றங்கள், புகைப்பழக்கத்தை கைவிடுதல் போன் றவை மூலம் உடல் எடையை குறைக்கலாம்.
உடல் எடையைக் குறைப்பதற்காக பட்டினி கிடத்தல், வேளை தவறி உண்ணுதல் போன்றவை பலனளிக்காது. ஒரு வேளை உணவு மறுத்து அடுத்த வேளை அதிகம் சாப்பிடுவதாலும், உணவை கட்ட நொறுக்குத் தீனிகளை உண்பதாலும் உடல் எடை அதிகரித்து இதய பாதிப்புகள் உண்டாகின்றன.
Wednesday, January 28, 2009
பார்சி இன மக்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்
அதாவது, சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர், பார்சி இன மக்கள், தமது சொந்த மண்ணான பாரசீகத்தில் (ஈரான் ) இருந்து வெளியேற நேரிட்டது. அவர்கள், இந்தியாவில் அடைக்கலம் புகுவதற்காக கப்பலில் பயணம் செய்து , குஜராத் கரையோரம் இந்திய (குஜராத்)மன்னரிடம் அனுமதி கோரி காத்து இருந்தனர்.
அப்போது, குஜராத் மன்னர், தம் மண்ணில் ஏற்கனவே மக்கள் தொகை அதிகம் , மேலும் யாருக்கும் இடம் இல்லை என்று குறிப்பால் உணர்த்துவதற்காக ஒரு பால் நிறைந்த பாத்திரத்தை கப்பலுக்கு கொடுத்து அனுப்பினார்.
பார்சி மக்களோ , அப்பாத்திரத்தில் சிறிது சர்க்கரை இட்டு , மன்னருக்கே திருப்பி அனுப்பினார் .
அதன் குறிப்பானது . "நாங்கள் தனித்து தெரிய மாட்டோம் . பாரமாகவும் இருக்க மாட்டோம் . தங்களுடன் கலந்துவிடுவோம் . மேலும் தங்கள் வாழ்வுக்கும் சுவை கூட்டுவோம் ".
இந்த நூதனமான பதிலால் மகிழ்ச்சி அடைந்த மன்னர் , அவர்களை இந்தியாவிற்குள் (இந்திய கலாச்சாரத்தை பின் பற்ற வேண்டும் என்பது போன்ற சில நிபந்தனைகளுடன்) அனுமதித்தார்.
அன்று முதல் இன்று வரை, அம்மக்கள், இந்தியகலாச்சாரத்திற்குள் தம்மை இணைத்துக் கொண்டு, அதே சமயத்தில் தங்கள் தனித்துவத்தினையும் இழக்காமல் , வாழ்ந்து வருகின்றனர் .
அது மட்டுமல்ல. மிக சிறிய எண்ணிக்கையிலேயே இருந்தாலும் , இந்தியாவில் அவர்கள் பெருமளவிற்கு மதிக்கப் படும் ஒரு சமுதாயமாக வாழ்ந்து வருகின்றனர்.
அணு சக்தி மேதை , ஹோமி பாபா , தொழில் அதிபர் டாடா ,பொருளாதார மேதை பெரோஸ் ஷா மேதா , ராணுவ தளபதி மனேக் ஷாச் போன்றோர் பார்சி இன மக்களே .
இதில் இருந்து நாம் கற்று கொள்ளவேண்டிய பாடம் என்ன?
இன்றைய தேதியில், பிறக்க ஒரு இடம் , பிழைக்க ஒரு இடம் என்பது வாழ்வியல் நியதி ஆகி விட்டது . அவ்வாறான சூழலில், நாம் வாழ வந்த பகுதியின் கலாச்சாரத்தினை மதித்து , மொழியினை (முடிந்த வரை) கற்றுக்கொண்டு, (அதே சமயத்தில் தங்கள் தனித்துவம் இழக்காமல்) அம் மக்களுடன் கலந்து வாழ்வோம் எனில் , பல பிரச்சினைகள் (உதாரணமாக தற்போதைய மராட்டியர் - வட இந்தியர் பிரச்சினை) தவிர்க்கப் படும்.
Source : http://sandhainilavaram.blogspot.com/2008/10/blog-post_13.html
எளியோரையும் மதிப்போம் !
சமீபத்தில் ஒரு சிறு கதையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, ஒரு ஏழைச் சிறுவன் ஒரு பெரிய ஐஸ்க்ரீம் பார்லருக்கு செல்கிறான். அங்கு இருக்கும் ஒரு வெய்ட்டரிடம் ஒரு பிஸ்தா ஐஸ்க்ரீம் விலை கேட்கிறான். ஒரு குறிப்பிட்ட விலையை வெய்ட்டர் சொன்னதும் தன்னிடமுள்ள சிறு பையில் உள்ள காசுகளை எண்ணி பார்க்கிறான். பின்னர், இதை விட குறைவாக விலை உள்ள ஐஸ்க்ரீம் வேண்டும் எனவும் அதன் விலை என்ன என்றும் கேட்கிறான். வெய்ட்டருக்கு மிக எரிச்சல். மிகப் பெரிய கஸ்டமர்கள் காத்து கொண்டிருகிறார்கள். இந்த சிறு பையன் தனது நேரத்தை வீணடிக்கிறானே என்று.
ஒரு வழியாக , அந்த பையனின் அடக்க விலையில் ஒரு ஐஸ்க்ரீம் கிடைக்கிறது. விட்டது தொல்லை என்று எண்ணும் வெய்ட்ட்ர் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு விட்டு அந்த பையன் சென்ற பிறகு அவனுடைய தட்டைப் பார்க்கிறார். அதில் ஐஸ்க்ரீம் விலையோடு அவருக்கான டிப்சும் இருக்கிறது. அந்த பையனிடம் இருந்த தொகையை கொண்டு அவனால் பிஸ்தா ஐஸ்கரிமே வாங்கி இருக்க முடியும் என்றாலும் கூட, வேயட்டருக்கும் கொஞ்சம் டிப்ஸ் கொடுக்க வேண்டும் என்ற நோக்கதினாலேயே அந்த பையன் குறைந்த விலையில் உள்ள ஐஸ்க்ரீம் வாங்கி இருக்கிறான் என்று அவர் புரிந்து கொள்கிறார்.
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் எனும் கருத்தினை கொண்ட இந்த கதை எனக்கும் கூட சில உண்மைகளை புரிய வைத்தது.
கொஞ்சம் யோசித்து பாருங்கள். பளபளக்கும் சூப்பர்/ஹைபெர் மார்கெட்டுகளில் மில்லி கிராம் தப்பாமல் எவ்வளவு பில் போட்டாலும் ஒன்றும் பேசாமல் பணம் நீட்டும் நாம் சந்தையில் இரண்டு ரூபாய்க்கு பேரம் பேசினாலும் கூட, நம்முடன் வந்திருக்கும் குழந்தையிடம் ஐந்து ரூபாய் மதிப்புள்ள பழத்தை அன்பாக (இலவசமாக) திணிக்கும் சிறு வியாபாரிகள்.
காரில் ஏற்படும் சிறு தொந்தரவுக்காக விசிடிங் சார்ஜ், இன்ஸ்பெக்சன் சார்ஜ், செக்கிங் சார்ஜ் (மனிதர் செய்யும் செக்கிங் இல்லாமல் கம்ப்யூட்டர் செக்கிங் வேறு) என்று கத்தியினை நமது பாக்கெட்டுக்கும் கழுத்துக்கும் வைக்கும் சர்விஸ் சென்டர்களுக்கு நடுவே வியர்க்க விறுவிறுக்க காரினை செக் செய்து, அதில் ஒரு பிரச்சினையும் இல்லை என்றால் பணம் வாங்க தயங்கும் (சில சமயங்களில் மறுக்கும்) கார் மெக்கானிக்குகள்.
இது மட்டுமல்ல, உறவினருக்காக மருத்துவமனையில் கவலையுடன் காத்திருக்கும் போது, கவலைபடாதீங்க, ஒண்ணும் ஆகாது என்று அன்பாக ஆறுதல் கூறும் (சிறு) மருத்துவமனை ஊழியர்கள்.
சிலரின் அகராதியில் பிழைக்க தெரியாதவர்கள் என்று பெயர் பெற்ற இவர்களுக்கு எத்தனை முறை நாம் ஒரு சக மனிதருக்கான மரியாதை கொடுத்திருக்கிறோம்? எத்தனை முறை அவர்களை நேருக்கு நேராக பார்த்து பேசி அவர்களின் அன்புக்கும் பெருந்தன்மைக்கும் மதிப்பு கொடுத்திருக்கிறோம்?
பணமும் பகட்டும் முக்கியம் அல்ல. மனமும் அதில் உள்ள நல்ல குணங்களுமே முக்கியம் என்றும் கதைகளின் உதவி இல்லாமலேயே நமக்கு உணர வைக்கும் இத்தகைய எளியோர் மன்னிக்கவும் இத்தகைய பெரியோரையும் மதிப்போமே.
Source : http://sandhainilavaram.blogspot.com/2008/11/blog-post_05.html
இது ஒரு (வாழ்க்கை) சமையல் குறிப்பு -copied
மூன்று சம அளவு பாத்திரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். மூன்றிலும் நீரை ஊற்றுங்கள். ஒரு பாத்திரத்தில் கேரட், இன்னொரு பாத்திரத்தில் முட்டை மற்றும் கடைசி பாத்திரத்தில் கொஞ்சம் காஃபி பொடி போடுங்கள். அனைத்து பாத்திரங்களையும் சுமார் பதினைந்து நிமிடங்கள் சூடு படுத்துங்கள். என்னடா இது? புது வகை சமையல் குறிப்பாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இதில் ஒரு சுவையான வாழ்க்கை தத்துவம் அடங்கி உள்ளது.எல்லா மனிதர்களுக்கும் வாழ்க்கை பாதை எப்போதுமே எளிமையானதாகவும் சந்தோசமானதாகவும் அமைந்து விடுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் கடும் போட்டிகளையும், சில சமயங்களில் பயங்கர விரோதங்களையும் கூட சந்திக்க வேண்டி இருக்கிறது. உதாரணமாக, புதிய அலுவலகம், புதிய தொழில், புதிய உறவுகள் மற்றும் புதிய இருப்பிடங்களில் ஏற்படும் சில கசப்பான அனுபவங்கள். இத்தகைய கடினமான சூழல்களில் நாம் கொதி நீரில் வீழ்ந்து கிடப்பது போல துடித்துப் போகிறோம். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களையும் அவற்றை ஏற்படுத்தும் சுற்றத்தாரையும் (சமூகம்) ஒவ்வொருவரும் மூன்று வகையாக எதிர்கொள்ளலாம்.
யே இவர்கள் மணம் வீச செய்கிறார்கள்.ஒரு கப் காஃபி குடித்துக் கொண்டே யோசியுங்கள்.
Source : http://sandhainilavaram.blogspot.com/2008/12/blog-post_17.html