| ஒரு முறை ஒரு வயதான ஜென் துறவி, தனது சீடர்களை அழைத்து, ஒரு இளஞ்சீடனைக் குறிப்பிட்டு, அவன் மெய்யறிவு பெற்று விட்டதாகவும். ஜென்னைப் பற்றி முழுமையாக அறிந்து விட்டான் என்றும் கூறினார். சீடர்களுக்கோ மிகுந்த ஆச்சரியம். அவனை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்த சீடர்கள் பலர் அங்கிருந்தனர். சீடர்கள் அனைவரும், அந்த இளஞ்சீடனைப் பார்த்து, "நீ மெய்யறிவைக் கண்டு விட்டாயா?" என்று கேட்டனர். இளஞ்சீடனும், "ஆம். கண்டு கொண்டேன்." என்றான். சீடர்கள், ஆவல் மிகுதியில், "மெய்யறிவு பெற்ற அனுபவம் எவ்வாறிருந்தது?" என்றனர். இளஞ்சீடனோ, "எப்போதும் போல. அற்புதமாய்." என்று புன்முறுவலுடன் கூறினார். |
Wednesday, May 20, 2009
எப்போதும் போல. அற்புதமாய்.!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment